districts

img

கொள்ளையர்களின் கூடாரமாகிய பொன்மலை ரயில்வே காலனி தனிப்படை அமைக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.31- பொன்மலை ரயில்வே காலனி பகுதியை பராமரிக்காமல் முட்புதர்களாக மாற்றி வழிப்பறி கொள்ளையர்களின் கூடாரமாக்கிய ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், பொன்மலை பொது மக்களை கொடூரமாக தாக்கி வழிப்பறி கொள்ளை செய்யும் திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும்.  பொன்மலை ரயில்வே காலனி பகுதியை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதி குழு சார்பில் திங்களன்று ஆர்மரிகேட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பொன்மலை பகுதி குழு செயலாளர் விஜயேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கராஜன், கார்த்திகேயன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மாறன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜா, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன், வாலிபர் சங்க பகுதி செயலாளர் சிவா ஆகியோர் பேசினர்.