திருச்சிராப்பள்ளி, ஏப்.9- திருச்சிராப்பள்ளி பெரம்பலூர் சாலையிலிருந்து முசிறி-துறையூர்-ஆத்தூர் சாலை வரை சுமார் 5.20 கி.மீ., தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப் படுகிறது. இரண்டாம் கட்ட புறவழிச் சாலைப் பணிகள் முடிவடைந்தவுடன், அனைத்து முக்கிய மாநில நெடுஞ்சா லைகளையும் இணைக்கும் வகையில், துறையூர் நகரைச் சுற்றி அரைவட்ட சாலை அமைக்கப்படும் என நெடுஞ்சா லைத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரி வித்தார். நெடுஞ்சாலைத் துறையின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப் படும். திட்டத்திற்கான நிலம் கையகப் படுத்தும் பணி நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணி 70 சத வீதம் நிறைவடைந்துள்ளதாகவும், வரு வாய்த்துறை அதிகாரிகள் இம்மாத இறுதிக்குள் பணிகளை முழுமையாக முடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரி விக்கின்றன. நிலம் ஒப்படைக்கப்பட்ட தும், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விடும் பணியை தொடங்கும். டெண்டர் விடப்பட்டு 18 முதல் 24 மாதங்களுக்குள் திட்டம் முடிக்கப்படும். புறவழிச் சாலையின் இரண்டாம் கட்ட பணியை வரவேற்றுள்ள சாலைப் பாதுகாப்பு ஆர்வலர் என்.சரவணன் கூறுகையில், “துறையூர் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு பாட்டை பெருமளவு குறையும். பெரம்ப லூரில் இருந்து தம்மம்பட்டி செல்லும் வாகனங்கள், குறிப்பாக கனரக வாக னங்கள் ஊருக்குள் செல்லாமல் நேராக செல்லலாம். இதன் மூலம் பயணம் இரு பது நிமிடங்கள் குறையும்” என்றார். துறையூர் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடந்த 2012- ஆம் ஆண்டு ஜூன் மாதம் புறவழிச் சாலை போக்குவரத்துக்காகத் திறக்கப் பட்டது. போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள புற வழிச்சாலையை அகலப்படுத்த வேண் டும். சென்னையிலிருந்து முசிறி, கரூர், நாமக்கல், பள்ளப்பட்டி ஆகிய பகுதி களுக்குச் செல்லும் பயணிகள் வாக னங்கள் மட்டுமல்லாது அரியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிமென்ட் ஆலைகளிலிருந்து சரக்கு களை ஏற்றிச் செல்லும் கனரக வாக னங்கள் கோயம்புத்தூர், ஈரோடு, பாலக் காடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதி களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. புறவழிச்சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்த நிலையில் சாலையை விரிவுபடுத்து வது அவசியம் என்கின்றனர் மக்கள்.