districts

img

கடலூரின் புதிய அடையாளமாக சதுக்கம்

கடலூர், மார்ச்.5- கடலூர் நகரின் புதிய அடையாளமாக கடலூர் சதுக்கம் பகுதியை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். கடலூர் ஆல்பேட்டை பகுதியில் மாவட்ட நுழைவு வாயிலின் அடையாளமாக கடலூர் சதுக்கம் (செல்பி பாயிண்ட்) புதிதாக அமைக்கப்பட்டிருந்தது. இதன் திறப்பு விழா திங்களன்று இரவு நடை பெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார்.  இதில் பங்கேற்ற வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  கடலூர் சதுக்கத்தை திறந்து வைத்து, செல்பி எடுத்தார். கடலூரில் புதுச்சேரியில் இருந்து கடலூருக்குள் நுழையும் இந்த பகுதி யில் இது அமைக்கப்பட்டுள்ளது . பொது மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் சென்ற னர். மேலும் கடலூர் மாநகராட்சி பகுதி களில் மாநில நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் 1,287 எண்ணிக்கையில் புதிதாக அமைக்கப்பட்ட எல்இடி தெரு மின் விளக்குகளையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.