களப்பாலை சேர்ந்த அரு ணாசலம்-சமுத்திரத்தம் மாள் தம்பதியினருக்கு மகனா கப் பிறந்தவர் குப்புசாமி. தலையாரி யான அருணாசலம் அவர்களுக்கு தமது மகனைப் படிக்க வைக்க ஆசை. ஆனால், ‘அடிமைகளாக’ இருந்த விவசாயக் கூலிகளுக்குப் பள்ளியில் இடம் கிடையாது. அதனால், தனக்கு மகன் பிறந்ததை யே மறைத்து விடுகிறார். தலையாரி யின் மகன் என்பதால் குப்புசாமி யைப் பள்ளியில் சேர்த்துக் கொள்கி றார் ஆசிரியர். ஆனால், ஆசிரிய ரையோ, மற்ற உயர் சாதி குழந்தை களையோ தொட்டுவிடக்கூடாது என்பதால் திண்ணையில் நின்று தான் படிக்க வேண்டும். சிறிய தவறு தெரிந்தாலும் பிரம்படிதான். எப்ப டியோ ஆறாம் வகுப்பு வரை படித்து விடுகிறான் குப்பு. அதன் பின்பு பண்ணையார் தொப்பையா முதலி யாரின் தலையீட்டால் படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்படுகி றது. அவர் வீட்டில் பண்ணையா ளாகி விடுகிறான்.
ஏழை சூத்திர மக்களுக்கு அங்கு நிகழும் கொடுமைகளைக் கண்டு கொதித்து எழும் குப்பு, ஒரு நாள் தன்னை அடிக்க வரும் பண்ணை மணியம் காதர் பாட்சாவின் சாட் டையைப் பிடுங்கி அவரை வெளுத்து வாங்குகிறான். ஆடிப்போய் விடு கிறது பண்ணை. பண்ணையாரின் பிடியிலிருந்து தப்பிக்க குப்பு களப்பாலை விட்டு வெளியேறு கிறான்.
பிறகு ஓவரூரைச் சேர்ந்த குப்பம்மாளைத் திருமணம் செய்கி றார் ; ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு இவர் பிரிந்து சென்று விடு கிறார். அதன் பின்பு தலைஞாயிறு வைச் சேர்ந்த வாஞ்சாலையைத் திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு சோலையம்மாள் என்ற மகளும், கணேசன், பக்கிரி சாமி மற்றும் சிவஞானம் என்ற மகன்களும் பிறக்கிறார்கள்.
நிலப்பிரபுத்துவக் கோட்டை யாக இருந்த தென்பரை, களப்பால் பகுதியில் வாழ்ந்து வந்த விவ சாயக் கூலிகளை இணைத்து சங் கம் அமைக்கவும்; கொடூரமும், வக்கிரமும் நிறைந்த பண்ணை யார்களுக்கு எதிராகப் போராடவும் பெரிதும் காரணமாக இருந்தவர் களப்பால் குப்பு. சமூக நீதிக்காக வும், ஒடுக்கப்பட்டவர்களுக்காக வும் போராடும் ஒவ்வொருவருக் கும் தெரிந்திருக்க வேண்டிய போராளி தோழர். களப்பால் குப்பு.
1943 ஆம் ஆண்டு விவசாயிகள் சங்கம் தஞ்சைப்பகுதிகளில் வேரூன்றத் தொடங்கியது. தோழர் பி.சீனிவாச ராவின் வருகை விவ சாயிகளின் போராட்டத்தை எழுச்சி யுடன் வழி நடத்தியது.
அவ்வாறு தென்பரையில் துவக்கப்பட்ட விவசாயிகள் சங்கத் தில் தான் தமது பணியைத் துவக்கி னார் களப்பால் குப்பு. விவசாயி கள் சங்கத்தின் வீரமான போராட் டத்தினால் விவசாயக் கூலிகளின் மீது தொடுக்கப்பட்ட சவுக்கடி, சாணிப்பால் திணிப்பு ஒழிந்தது. அதனால் தஞ்சை மாவட்டத்தில் இருந்த கூலி உழவர்கள், பண்ணை யாட்கள், குத்தகையாளர்கள், வார சாகுபடியாளர்கள் , சிறுசிறு விவ சாயிகள் ஆகியோர்களுக்குத் தாரக மந்திரமாக “சங்கம்” இருந்தது
. தோழர் பி.சீனிவாச ராவ் கலந்து கொண்ட விவசாய சங்க கூட்டங்க ளில் தேன் கூட்டில் மொய்க்கும் தேனீக்களைப் போல் ஆயிரக்க ணக்கில் மக்கள் கூடினார்கள். அவ ரின் ஒவ்வொரு வார்த்தைகளும் மக்களுக்குப் புத்துணர்ச்சியை அளித்தது. “ சாட்டையால் அடிக் காதே! சாணிப்பாலை நிறுத்து! அடித்தால் திருப்பி அடிப்போம்! “வாடி போடி” என்றால் “வாடா போடா” என்போம் என்ற வார்த்தை கள் பண்ணையார்களின் மனதில் பயத்தை உருவாக்கின.
களப்பால் குப்பு , பங்கேற்புடன் பல்வேறு கூட்டங்கள் நடந்தன. அதனால் அப்பகுதியில் எப்போ தும் பதற்றம் நிலவியது. பிரச்ச னையை முடிவிற்குக் கொண்டுவர களப்பால் குப்புவைக் கொலை செய்ய திட்டமிட்டு பண்ணையார் கள் கூலிப்படையை நியமித்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் தமது வீரத்தால் தப்புகிறார் குப்பு. ஒரு முறை இவரைக் கொலை செய்ய வந்த நான்கு கூலிப்படை யினருடன் பேசி, அவர்களை மனம் மாறச் செய்வதும், அவர்கள் குப்பு வைப் பாதுகாப்பாக வீட்டில் விட்டு செல்வதும் மனதை நெகிழச் செய்வ தாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து களப்பா லில் பிரமாண்டமான ஒரு கூட்டத் திற்கு ஏற்பாடு செய்தார் குப்பு. அத னைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் , குப்புவிற்கு தண் டனை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிந்தித்த பண்ணை யார்கள் கூலிப்படையை ஏவி குப்புவின் மூத்த மகன் கணேசனின் கையில் வெட்டி விடுகிறார்கள். செய்தி கேள்விப்பட்ட குப்புவின் மனைவி அதிர்ச்சியிலும் , ஏற்க னவே இருந்த பெரியம்மை பாதிப்பி னாலும் இறந்து விடுகிறார்.
இறுதியாக குன்னியூர் கிரா மத்தில் சேரிவாசிகள் பண்ணை யாட்களின் தாக்குதலுக்கு உள் ளாகி வீடுகளை இழந்தார்கள்; பெண்கள் கேவலப்படுத்தப்பட்டா கள். பொறுமை கடந்த சேரி மக்கள் வெகுண்டனர்; குண்டர்களை எதிர்த்து மோதினர். அந்தக் கை கலப்பில் கூலிப்படையினர் இரு வர் இறந்தனர். கொலைப்பழி களப்பால் குப்புவின் மீது விழுந் தது. தஞ்சை அமர்வு நீதிமன்றம் அவருக்கு “தூக்குத் தண்டனை” விதித்தது.
அவர் திருச்சி சிறையில் அடைக் கப்பட்டார். அவரை விடுதலை செய்ய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. சிறையில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது அவ ருக்கு மருந்து கொடுக்கும் சாக்கில் விஷமுள்ள மாத்திரைகள் இராமன் என்ற கைதி மூலம் கொடுக் கப்பட்டது. அதனால் 18/04/1948 அன்று இரத்தவாந்தி எடுத்து அந்த எரிமலையின் வாழ்வு மரணத்தில் முடிந்தது.
1911-ஆம் ஆண்டு பிறந்த களப்பால் குப்பு இந்த மண்ணில் 37 ஆண்டுகளே வாழ்ந்தார். அவ ரின் வாழ்வும், தியாகமும் வருங் கால சந்ததிகளுக்குப் பாடமா கவே இருக்கிறது. களப்பால் குப்பு வின் கதை பட்டிதொட்டிகளிலெல் லாம் பேசப்பட வேண்டும்.