திருஆரூரான் கரும்பு விவசாயிகள் முடிவு
பாபநாசம், ஏப்.29-
சுவாமிமலை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திரு மண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு கடந்த நவம்பர் 30 முதல் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட் டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமையன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டத் தலைவர் செந்தில் குமார், செயலர் கண்ணன், ஆலை மட்டச் செயலர் முருகேசன், துணைச் செயலர் சரபோஜி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் பேசுகையில், ‘‘150 நாள் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் சென்று விட்டது. 150 நாள் போராட் டத்தில் நாம் முன் வைத்த கோரிக்கை தேசிய கடன் தீர்ப்பாயத்துக்கும் போய் விட்டது.
அதிகாரிகளைச் சந்தித்தும், அமைச் சரை சந்தித்தும் பிரச்சனை எடுத்துக் கூறப்பட்டது. இப்பிரச்சனை குறித்து நாகை மாலி சட்டமன்றத்தில் தீவிர மாகப் பேசினார். தற்போது அரசு இதற்கு செவி மடுத் துள்ளது. விவசாயிகள் பெயரில் வங்கி யில் வாங்கிய கடனிலிருந்து விவசாயி களை விடுவித்து விவசாயிகளுக்கு கடன் இல்லா சான்று வழங்க வேண்டும். இந்த ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்’’ என்றார்.
மேலும் கோரிக்கை நிறைவேறும் வரை போராட் டம் தொடரும் என முடிவானது.