districts

திருச்சி முக்கிய செய்திகள்

சாலை அமைக்கும் பணி தொடங்கியதால் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது

புதுக்கோட்டை, பிப்.28-  புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடியில் அதிகாரி கள் முன்னிலையில் சாலை அமைக்கும் போரட்டம்  தொடங்கியதால் முதலமைச்சருக்கு அடையாள அட்டை களை அனுப்பும் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. ஆலங்குடி தாலுகா கீரமங்கலம், நகரம், சேந்த ரன்குடி கிராமங்களை மையப்படுத்தி உள்ளது பெரி யாத்தாள் ஊரணி. இதற்கு கொத்தமங்கலம் அன்னதா னக்காவேரி ஆற்றிலிருந்து வரத்துக் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் கடந்த ஆண்டு தூர்வா ரப்பட்டது. இதனால் கால்வாயின் தெற்குக் கரையில் உள்ள வீடுகள், தோட்டங்களுக்கு செல்ல சாலை வசதி  இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், கருப்பையா மகன் செல்வம் (40) என்ப வர் தனது வீட்டிற்குச் செல்ல கால்வாய் கரையோரம் சாலை வசதி வேண்டும் என முதலமைச்சர் மற்றும் அதி காரிகளுக்கு மனுக்கள் கொடுத்ததுடன் குடும்பத்துடன் பலமுறை காத்திருப்புப் போராட்டங்களையும் நடத்தி யுள்ளார்.  கடந்த ஒரு வருடமாக நடவடிக்கை இல்லாத  நிலையில் தனது குடும்பத்தில் உள்ள ஆறு ஆதார் அட்டைகள், நான்கு வாக்காளர் அடையாள அட்டைகள், இரண்டு குடும்ப அட்டைகளை முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கும் போராட்டத்தை அப்பகுதி மக்கள் அறிவித்திருந்தனர்.  இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட வருவாய்  கோட்டாட்சியர் முருகேசன் செவ்வாய்கிழமை சம்பவ  இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். வட்டாட்சி யர் செந்தில்நாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுல கிருஷ்ணன், பொதுப்பணித்துறை அதிகாரி கோவேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  பின்னர், உடனடியாக சாலை அமைப்பதாக கோட்டாட்சியர் உறுதி அளித்ததுடன் பொக்லின் வாக னத்தை வரவைத்து சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து ஒரு வருடப் போராட்டம்; முடிவுக்கு வந்தது. 

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் முறைகேடு தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, பிப்.28 -  நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயி களிடம் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடும் நட வடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்  மாவட்ட ஆட்சியரகத்தில்  ஆட்சியர் கவிதா ராமு தலைமை யில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, செயலாளர் ஏ.ராமை யன் ஆகியோர் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி னர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நேரடிக் நெல்  கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.20 முதல்  ரூ.60 வரை பிடித்தம் செய்கின்றனர். சாகுபடி செலவை யே ஈடுகட்ட முடியாத விவசாயிகளுக்கு இது மேலும்  நெருக்கடியைத் தருகிறது. எனவே, நெல்கௌ;முதல் நிலையங்களில் நடைபெறும் இத்தகைய முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். அரிமளம் ஒன்றியம் ராயவரத்தில்  பட்டியலின மக்கள் 42 பேருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே  பட்டா வழங்கப்பட்டது. இதை உடனடியாக வரு வாய்துறை கணக்கில் சேர்த்து அங்கு குடியிருந்து வரும்  மக்களுக்கு குடிநீர், மின் வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். திருவரங்குளம் ஒன்றியம் வம்பன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், வேளாண்மை விரி வாக்க மையம் மற்றும் தோட்டக்கலைத்துறைகளில் நடை பெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் இடுபொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னமராவதி ஒன்றியம் கொன்னையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டியில் வசிக்கும் வெள்  ளைக்கண்ணு வீட்டில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்றனர்.

தேசிய அறிவியல் தின விழா

புதுக்கோட்டை, பிப்.28-  தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புதுக்கோட்டை வாச கர் பேரவையும் இணைந்து புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினவிழாவை நடத்தியது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பி.சிவப்பிர காசம் தலைமை வகித்தார். வாசகர் பேரவைத் தலைவர் சா. விஸ்வநாதன் அறிமுக உரையாற்றினார். அறிவியல் இயக்க  மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் சர்.சி.ராமன் குறித்து விளக்கவுரையாற்றினார்.  அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ம.வீரமுத்து வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக பள்ளியின் துணை முதல்வர் ஜி.செந்தில் வரவேற்க, ஆசிரியர் இன்பராஜ் நன்றி  கூறினார். 

நெற்பயிருக்கு ரூ.23.79 கோடி இழப்பீடு பெறப்பட்டுள்ளது புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை, பிப்.28-  புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவம் தவறி 3 நாட்கள் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ரூ.23.79  கோடி இழப்பீடு பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர்  பேசியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி. முதல் வாரத்தில் மூன்று நாட்கள் பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்தன. இதுகுறித்து நடத்தப்  பட்ட கணக்கெடுப்பில், மாவட்டம் முழுவதும் 11,190 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதும், 1.645 ஹெக்டேர் பருப்புகள், 7.645 ஹெக்டேர் எண்ணெய் வித்துகள் சேதம டைந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து இவற்றுக்கான கணக்கீடுகள் முடித்து, நெற்பயிர்களுக்கு ரூ. 23.79 கோடியும், பருப்பு வகைகளுக்கு ரூ. 4935, எண்ணெய் வித்துகளுக்கு ரூ. 22,935 இழப்பீடு உறுதி செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகை விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப் படும் என்றார். 

முஸ்லிம்களுக்கு ஐந்து சதவீத இடஒதுக்கீடு வேண்டும்: மு.தமிமுன் அன்சாரி

தஞ்சாவூர், பிப்.28-  முஸ்லிம் சமூகத்துக்கான இட ஒதுக் கீட்டை ஐந்து சதவீதமாக உயர்த்த தமிழக  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்  றார் மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி. தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடை பெற்ற மனித நேய ஜனநாயக கட்சியின் எட்டாம் ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முஸ்லிம் சமூகத்துக்கு தமிழக அரசு  3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கி வரு கிறது. இதை ஐந்து சதவீதமாக உயர்த்தித் தர வேண்டும். பீகாரில் அமல்படுத்தப் பட்டுள்ளதை போல, தமிழ்நாட்டிலும் ஜாதி  வாரிக் கணக்கெடுப்பை அரசு மேற்  கொள்ள வேண்டும்.இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு சமூகத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் விகிதாச்சார அளவில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.  நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து சக்திகளும், சமூகநீதி சக்திகளும், மத,  ஜாதி நல்லிணக்க சக்திகளும் ஓரணியில் திரண்டு பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைத்து 2024- ஆம் ஆண்டு மக்கள வைத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார் தமிமுன் அன்சாரி.

கட்டுமானப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க பொறியாளர்கள் வலியுறுத்தல்

தஞ்சாவூர், பிப்.28-  அரசு கட்டுமானப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து, கட்டுமானப் பொருட் களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டு மான, பொறியாளர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பு வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில், செவ்வாயன்று இக்கூட்டமைப் பின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் எம்.ரவி கூறியதாவது: பொறியாளர்கள் கட்டுமானப் பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக குறிப்பிட்ட தொகைக்குள் பணிகளை முடிக்க முடியாமல் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம். அரசு கட்டு மான பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து கட்டுமானப் பொருட்களின் விலை யைக் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல், ஜல்லி, குண்டுக்கல் கடந்த சில மாதங்க ளாக மிகவும் தட்டுப்பாடு உள்ளது. சில ஊர்களில் குவாரிகள் திறக்காததால் மணல், ஜல்லி கிடைப்ப தில் சிக்கல் உள்ளது. இதனால் கட்டடத் தொழிலா ளர்களுக்கு வேலை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு பாதிப்பை சந்தித்து வருகிறோம். எனவே குவாரிகளைத் திறந்து கட்டுமான பொருட்களை தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுப்பணித்துறையில் ஆண்டுக்கு ஒரு  முறை பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப் பட்டு வருகிறது. விலை நிர்ணயம் செய்யும் கமிட்டி யில் பொறியாளர் ஒருவரை நியமிக்க அரசு ஆணை வழங்க வேண்டும். மாநில உள்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும்  வளர்ச்சிக்கு முன்னேற்பாடாக மாநில திட்டக்  குழு செயல்பட்டு வரும் சூழலில், அதில் பொறி யாளர்கள் யாரும் இடம் இடம்பெறவில்லை. மாநிலத் திட்ட குழுவில் பொறியாளர் ஒருவரை இணைத்து செயல்படுத்த அரசு ஆணை வெளி யிட வேண்டும்” என்றார்.