மயிலாடுதுறை, பிப்.13- முறைகேடாக பதவியை பெற்று ஊழலில் ஈடுபட்டு வரும் பூம்புகார் கல்லூரியின் முதல்வரை பணிநீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கல்லூரி முன்பு தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பூம்புகார் அருகே யுள்ள மேலையூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை யின் கீழ் பூம்புகார் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி யின் முதல்வராக முறைகேடாக பதவிக்கு வந்து முதல்வராக நீடித்து வரும் அறிவொளி கல்லூரி யில் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளதோடு, ஆசிரியர்கள், மாணவர்கள் விரோத நடவடிக்கை களில் தொடர்ந்து ஈடுபட்டு வரு வதாக குற்றஞ்சாட்டி கல்லூரி பேரா சிரியர்கள் தொடர்ந்து போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிப்ரவரி 8 அன்று பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் சார்பில் மயி லாடுதுறை இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எனினும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால், ஞாயிறன்று கல்லூரி முதல்வரை நீக்கக்கோரி பேராசிரியர்கள் 40 பேர் உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டம் இந்நிலையில், அடிப்படை வசதிகள் செய்துத் தரகோரியும், மாணவர்களை ஒருமையில் பேசு வது, கல்லூரியில் பல்வேறு வகை யில் மோசடியில் ஈடுபட்டு வரும் கல்லூரி முதல்வர் அறிவொளியை கல்லூரியில் இருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி திங்களன்று இந்திய மாண வர் சங்கம் தலைமையில் மாண வர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் அமுல்காஸ்ட்ரோ, தலை வர் மணிபாரதி உட்பட 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.