திருச்சிராப்பள்ளி, மே 26-
திருச்சிராப்பள்ளி நகரில் குடியிருப்போர் நலச் சங்கங்கள், தனிநபர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் 199 சாலை கள் மோசமாக உள்ளது தெரியவந்துள்ளது.
ஆன்-லைனில் மோசமான சாலைகளின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு, சாலை களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாநகராட்சி யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள் ளது. ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் மே 13 வரை நடத்தப்பட்ட ஆய்வில், நிலத்தடி வடிகால் திட்டப்பணிகள், குடிநீர் விநியோகப் பணிகள் மற்றும் சமீபத்திய மழை காரணமாக நகரில் 199 சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.
தணிக்கையின் படி, மண்டலம் I-இல் ஏழு சாலைகள் சேதமடைந்துள்ளன. மற்ற மண்ட லங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு. மண்டலம் நான்கில் 94 சாலைகள் சேதமடைந் துள்ளன. மண்டலம் இரண்டில் 49, மண்ட லம் ஐந்தில் 15, மண்டலம் மூன்றில் 34 சாலைகள் சேதமடைந்துள்ளன. சேதம டைந்த 199 சாலைகளில் 182 சாலைகள் சீர மைக்கப்பட வேண்டும், மீதமுள்ள 17 சாலை களுக்கு ஒட்டுவேலை தேவைப்படுகிறது. தணிக்கை அறிக்கை, உடனடியாக பழுது பார்க்க வேண்டிய 11 சாலைகளை சுட்டிக் காட்டியுள்ளது.
நிலத்தடி வடிகால் பணிக்காக தோண்டப் பட்ட சாலைகள் போதுமான அளவில் புனர மைக்கப்படவில்லை. என்று அரசு சாரா அமைப்பு மோசமான நிலையில் காணப்படும் சில சாலைகளை மாநில நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் செய்து வருகிறது. சில சாலை களின் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “சேதமடைந்த சாலைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்போம். சமீபத்தில் சீரமைக்கப்பட்ட சாலைகள் குறித்த தக வல்கள் விரைவில் வெளியிடப்படும்” என் றார்.