districts

img

சாத்தூர் அருகே மதநல்லிணக்கம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கிற்கு சீர்வரிசை கொண்டு வந்த இஸ்லாமியர்கள்

சாத்தூர், டிச.16- சாத்தூரில் புதிதாக கட்  டப்பட்ட மாரியம்மன் கோவில்  குடமுழுக்கிற்கு இஸ்லாமி யர்கள் சீர்வரிசை வழங்கி னர். இந்நிகழ்வு மதநல்லி ணக்கத்தை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது சத்திரப்பட்டி ஊராட்சி. இங்குள்ள  போக்குவரத்து நகரில் புதிதாக மாரியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக இக்கோவிலை  கட்டுவதற்கு, அப்பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பட்ட மக்களிடமும் நன்கொடை பெறப்பட்டது. அப்போது, இந்நகரில் வசிக்கும் இஸ் லாமியர்களும் தங்கள் பங்  காக முடிந்த அளவு நன் கொடையாக தங்களது பங்க ளிப்பை அளித்தனர்.   இந்நிலையில், மாரி யம்மன் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து கடந்த டிசம்பர் 15 அன்று  குடமுழுக்கு நிகழ்ச்சி நடை பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இந்நிகழ்ச்சி யில், இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர். மேலும்,   கோவிலுக்கு சீர்வரிசை களையும் வழங்கினர். ஒற்றுமையாக வாழும்  இந்துக்கள், இஸ்லாமியர் களிடையே தொடர்ச்சியாக சங்பரிவார அமைப்புகள் வெறுப்பை விதைத்து வரும் நிலையில், இந்து கோவில்  கட்டுவதற்கும், குடமுழுக் கில் பங்கேற்று சீர்வரிசை வழங்கியதும் தமிழகத்தின் பாரம்பரியமான மதநல்லி ணக்கத்தை மேலும் பறை சாற்றிடும் வகையில் அமைந்  துள்ளது.