districts

img

தேர்தல் யுத்தத்தில் மோடி அரசு நிச்சயம் வீழ்த்தப்படும்

கே.சாமுவேல்ராஜ் பேச்சு மயிலாடுதுறை, பிப்.9 - மயிலாடுதுறை மாவட்டம் இலுப்பூர் சங்கரன்பந்தல் கடைவீதி யில் இலுப்பூர் தியாகி வீ.கோவிந்த ராஜ் நினைவு தின பொதுக்கூட்டம் வியாழனன்று நடைபெற்றது.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ் பேசியதாவது: 140 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டின் பொதுச் சொத்து களை விற்று வரும் உலகின் மிகப் பெரிய தேசத்துரோகி மோடிதான். வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பனை இன்றுவரை துரோகி என கூறி வருகிறோம். அதேபோன்று தான் மோடியை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தேசத்துரோகி என வரலாறு சொல்லும். ராமர் கோவில் குடமுழுக்கு  விழாவிற்கு ஒவ்வொரு வீடாகச் சென்று நீங்கள் அவ்வளவு தூரம் வர வேண்டாம்; வீட்டிலேயே இருந்து விளக்கேற்றுங்கள்; ராமர் உங்களுக்கு அருள்பாலிப்பார் என்றது எதற்காக தெரியுமா?  தேர்தலில் இந்த வாக்காளர் களெல்லாம், இவருக்கு அருள்பா லிக்க வேண்டும் என்பதற்காகத் தான்! ஆயிரக்கணக்கான கோயில் களில் பட்டியலினத்தவர்கள் உள்ளே நுழைய முடியவில்லை. அவர்களையெல்லாம், அண்ணா மலையால் கோயிலுக்குள் அழைத் துச் செல்ல முடியுமா? அதைப்  பற்றியெல்லாம் அவர் மூச்சுவிடு வதே கிடையாது.  தமிழ்நாடும் கேரளாவும் ஒரு சுதந்திரப் போரை நடத்தி வருகிறது. நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகின்றது. மாநி லங்களுக்கு திருப்பி தர வேண்டிய வரித்தொகையை ஒன்றிய அரசு தருவதில்லை. கர்நாடக மாநிலம் 100 ரூபாய் கொடுத்தால், ஒன்றிய அரசு வெறும்  13 ரூபாயை திருப்பித் தருகிறது.  அதேநேரத்தில் உத்தரப்பிரதேசத் திற்கோ 333 ரூபாய் தருகிறது. மத்தியப் பிரதேசத்திற்கு 279 ரூபாய் தருகிறது.  வருகிற நாடாளுமன்றத் தேர்த லில் எப்படியாவது வெற்றி பெற  வேண்டுமென பாஜக நினைக் கிறது. ஆனால் அது நடக்காது.  கம்யூனிஸ்ட் பேரியக்கம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு பெரும் அணிவகுப்பை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாநி லத்திலும், மாநில கட்சிகளை அணுகி கம்யூனிஸ்ட் தலைவர்கள் வலுவான கூட்டணியை உரு வாக்கி வருகின்றனர். இந்த யுத்தத் தில் மோடி அரசு நிச்சயம் வீழ்த்தப் படும். இவ்வாறு அவர் பேசினார்.