பெரம்பலூர், மார்ச் 6 - பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை கேட்டறியும் திட்டமாக “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் புதனன்று தொடங்கி வைத்து, பயனாளிகளுடன் தொலைபேசியில் கலந்து ரையாடினார். அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்கள் மூலம் பயனடைந்த பயனாளிகளின் பட்டியலில் சிலரை தேர்வு செய்து அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினார். அதனடிப்படையில், போக்குவரத்துத் துறை வருவாய்த்துறை, மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், தாட்கோ, மாவட்ட தொழில் மையம் என பல்வேறு துறைகளில் பயனடைந்த எழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா, களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வி, தேவி, தாட்கோ மூலம் பயனடைந்த கோமதி, களரம்பட்டியைச் சேர்ந்த தேவி என்ற மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பயனாளி களிடம் உரையாடினார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பி னர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சி.இராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.