districts

குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறது புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை

புதுக்கோட்டை, ஜூன்.20:-  தொடர்ந்து குற்றவாளிகளை தப்பிக்க விட்டு வேடிக்கை பார்க்கிறது புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுக்கோட்டை மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.நாகராஜன் தலைமையில் புதன்கிழமை நடை பெற்றது.  மாநிலக்குழு உறுப்பினர் கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்ன துரை எம்எல்ஏ உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளி யிட்டுள்ள அறிக்கை பின்வரு மாறு: புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்குப் பிரச்சனை நாளு க்கு நாள் அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் மாவட்டம் முழுவதும் தொடரச்சி யாக நடைபெற்று வருகின்றன. குற்றச்செயல்கள் மீது மாவட்டக் காவல்துறை உறுதியான நடவ டிக்கை எடுக்காததால் கொடிய வர்களின் கையில் அப்பாவி மக்கள் சிக்கி சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். தங்களை யாரும், எதுவும் செய்யமுடியாது என்கிற ஆண வத்தில் குற்றவாளிகள் இருப்ப தால், உயர் அதிகாரிகள்கூட கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சமீபத் தில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தடுத்து நிறுத்திய போது, அவரின் காரை மோதி சேதப்படுத்திவிட்டு குற்றவாளிகள் சாதாரணமாக தப்பித்துச் சென் றுள்ளனர். நூலிழையில் கோட்டாட்சியர் தெய்வநாயகியும் அவரது உதவியாளரும் உயிர் பிழைத்துள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இகுறித்து, அன்னவாசல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெய ருக்கு இரண்டுபேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர். ஒருசில நேர்மையான உயர் அதிகாரிகளுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்க ளின் நிலை என்னவாக இருக்கும்.? மேலும், குறைந்த வட்டிக்கு கோடிக்கணக்கில் கடன் தருவ தாக ஆசைகாட்டி ஒரு கும்பல் பல லட்ச ரூபாயை மோசடி செய்துள் ்ளது. கடியாபட்டி, குழிப்பிறை போன்ற இடங்களில் பெரிய அரண் மனை போன்ற வீடுகளில் சினிமா சூட்டிங் எடுப்பதாக வாடகைக்கு எடுத்துள்ளனர். பின்னர், குறைந்த வட்டியில் கோடிக்கணக்கில் கடன் தருவதாக  அங்கு வரச்சொல்லி பல லட்ச ரூபாய்களை கமிஷனா கவும், பூர்த்தி செய்யப்படாத காசோலைகளையும் பெற்றுக் கொண்டு, மறுநாள் குறிப்பிட்ட இடத்தில் பணத்தை காரில் கொண்டுவந்து தருவதாக தெரி வித்துள்ளனர். பின்னர் தலை மறைவாகி விடுகின்றனர். இதுகுறித்து காவல்நிலையத் தில் புகார் தெரிவித்தால் குற்றவாளி களிடம் இருந்து சொற்பத் தொகை யை வாங்கிக் கொடுத்துவிட்டு, வழக்கும் பதியாமல், குற்றவாளி கள் யார் என்றுகூட காட்டாமல் காவல்துறையினர் மறைத்து வரு கின்றனர். இது, காவல்துறையின ருக்கும் குற்றவாளிகளுக்கும் உள்ள கள்ளக்கூட்டை வெளிப் படுத்துவதாக உள்ளது. இதேபோல, அரசு வேலை வாங்கித் தருவதாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடைத்தர கர்கள் பெருந்தொகையை கை யாடல் செய்து வருகின்றனர். இது குறித்தும் காவல் நிலையங்க ளில் புகார் தெரிவித்தால் கால்துறை யினர் அலட்சியத்தையே பதிலா கத் தந்துகொண்டு இருக்கின்றனர். குற்றவாளிகளை தப்பவிடு வது, அவர்களுக்கு ஆதரவளிப்பது அல்லது உறுதியான நடவ டிக்கை எடுக்காதது போன்ற காவல்துறையினரின் செயல் பாடுகளால் மாவட்டத்தில் சாமானிய மக்கள் அச்சத்துட னேயே வாழவேண்டிய நிலை க்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாநில அரசும், மாவட்ட நிர்வா கமும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையின் செயல்பாடு களை கண்காணித்து உரிய நடவ டிக்கைகளையும், மாற்றங்களை யும் செய்ய வேண்டும். பொது மக்கள் நிம்மதியாக வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு  வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.