தஞ்சாவூர், நவ.15- தஞ்சாவூர் அரண்மனை வளாகம் அருகே உள்ள காமராஜர் காய்கறி மார்க்கெட் ரூ.17.50 கோடியில் சீரமைக் கப்பட்டுள்ளதை, செவ்வாய்க்கிழமை மேயர் சண்.ராமநாதன் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் அரண்மனை அருகே காமராஜர் காய்கறி மார்க்கெட் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட்டில் இருந்த கடைகளின் கட்டிடங்கள் பழுதடைந்ததால், அந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் காமராஜர் காய்கறி மார்க்கெட் சீரமைக்கப்பட்டது. இதில் சிறிய மற்றும் பெரிய கடைகள் என 304 கடைகளும், 170 இரு சக்கர வாகனங் கள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 20 கன ரக லாரிகள் நிறுத்தவும் வசதிகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன.
தற்காலிக மார்க்கெட்
காமராஜர் மார்க்கெட் சீரமைக்கும் பணி நடைபெற்றதால், புதுக்கோட்டை சாலை யில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தற்கா லிக மார்க்கெட் இயங்கி வந்தது. ஆனால் மழைக்காலங்களில் தற்காலிக மார்க்கெட் டில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராம நாதன் காமராஜர் காய்கறி மார்க்கெட்டை நேரில் ஆய்வு செய்து, முடிவுற்ற பணிகள் குறித்து ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பொறி யாளர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, காமராஜர் காய்கறி மார்க்கெட் வியாபாரி கள் சங்க நிர்வாகிகள், மேயரிடம் தற்காலிக மார்க்கெட் சேறும் சகதியுமாக இருப்பதால், பணிகள் முடிவுற்ற காமராஜர் மார்க்கெட் டில் தற்சமயம் வியாபாரம் செய்ய அனு மதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து மேயர் சண்.ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தஞ்சா வூர் காமராஜர் காய்கறி மார்க்கெட் பணிகள் முடிவுற்றுள்ளது. மழைக்காலமாக இருப் பதால் தற்காலிக மார்க்கெட் சேறும் சகதி யுமாக இருக்கிறது. எனவே அங்குள்ள பொதுமக்கள், வியாபாரிகளின் கோரிக் கையை ஏற்று தற்சமயம் காமராஜர் மார்க் கெட்டில் வியாபாரம் செய்ய தற்காலிகமாக அனுமதி வழங்கப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய ஏற்கெனவே மாநகராட்சி நிர்வாகத்திடம் அதற்கான முன்வைப்புத் தொகை செலுத் திய வியாபாரிகளுக்கு மட்டும் அனு மதிக்கப்படும். விரைவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி இந்த காம ராஜர் மார்க்கெட்டை காணொளி மூலம் திறந்து வைப்பார். எனவே பொதுமக்க ளின் நலனை கருத்தில் கொண்டு நவ.16 ஆம் தேதி முதல் வியாபாரிகள் இங்கு வியா பாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறது” என்றார்.