புதுக்கோட்டை, அக்.15 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் வட்டத்தைச் சேர்ந்த 5 கிராம ஊராட்சிகளில் முறையாக கிராம சபைக் கூட்டம் நடத்ததால், சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வேட்ட னூர் ஊராட்சியைச் சேர்ந்த பதினெட்டாம் படி என்பவர், ஒக்கூர் ஊராட்சியைச் சேர்ந்த முருகரத்தினம், அமரடக்கி ஊராட்சியைச் சேர்ந்த லியோ, பொன் பேத்தி ஊராட்சியைச் சேர்ந்த ஆனந்த் பிரபு, பூவளூர் ஊராட்சியைச் சேர்ந்த காசிநாதன் ஆகியோர் தனித்தனியே தங்களின் மனுக்களை அளித்தனர். மேற்படி மனுக்களில், “கடந்த அக்.2 அன்று அனைத்து கிராமங்களி லும் கிராம சபைக் கூட்டங்கள் நடை பெற்றபோது, எங்கள் ஊர்களிலும் நடந்தது. ஆனால், பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. முறைப்படி 31 ஆவ ணங்கள் எதையும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவில்லை. தீர்மானங் கள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால், கூட்டம் நடந்ததாகக் கூறி கை யெழுத்திட்டுக் கொண்டனர். ஊராட்சி யின் வரவு-செலவுக் கணக்குகள் வைக்கப்படவில்லை. ஆன்லைனில் வரவு செலவுக் கணக்குகளைப் பார்த்த போது அதில் பல முறைகேடுகள் தெரிய வருகின்றன. எனவே சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை நடத்தி, முறையாக வரவு செலவுக் கணக்குகளை வைத்து, ஆவ ணங்கள் அனைத்தையும் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெற வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.