தஞ்சாவூர், ஜன.3 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருச் சிற்றம்பலம் கடைவீதியில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தொ குதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலை மையில் நடைபெற்றது. இதில், திமுக ஒன்றியச் செய லாளர்கள் க.அன்பழகன், கோ.இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், ஒன்றியப் பொறியாளர் சிவக்குமார், நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் அருள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.