புதுக்கோட்டை, ஜன.4- தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக் கட்டாக புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட் டை அருகே தச்சங்குறிச்சி யில் சனிக்கிழமை நடை பெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. மாவட்ட செயலாளர் ஆட்சியர் எம்.அருணா தலை மையில் மாடுபிடி வீரர்கள் உள்ளிட்டோர் காலை 8 மணி யளவில் ஜல்லிக்கட்டு உறுதி மொழி எடுத்துக்கொண்ட னர். அதன் பிறகு, மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கொடி அசைத்து ஜல்லிக் கட்டை தொடங்கி வைத்த னர். இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட் டங்களைச் சேர்ந்த 459 காளைகள் ஒன்றன்பின் ஒன் றாக அவிழ்த்துவிடப்பட்டன. இதுபோல, சீறிப்பா யும் காளைகளை அடக்குவ தற்காக சுழற்சி முறையில் சுமார் 300 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். ஜல்லிக்கட்டைக் காண்ப தற்காக பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் திரண்டனர். காளைகள் முட்டியதில் மொத்தம் 20 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பு பணியில் கந்தர் வக்கோட்டை போலீசார் ஈடுபட்டனர். சிறந்த வீரராக மதுரை ஸ்ரீதர் தேர்வு சிறந்த மாடுபிடி வீரராக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் தேர்வு செய் யப்பட்டார். சிறந்த காளை யாக புதுக்கோட்டை மாவட் டம் வந்தனா குறிச்சியைச் சேர்த்த ஏஆர்எஸ்.முத்துச் சாமியின் காளை தேர்வு செய்யப்பட்டது. இதேபோல, ஆலங்குடி அருகே அரையப்பட்டி ஊராட்சி வன்னியன்விடுதி யில் ஜனவரி 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற் காக மூகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.