districts

img

மாணவிக்கு காது கேட்கும் இயந்திரம் வழங்கிய குடும்பத்தினர்

மயிலாடுதுறை, மார்ச் 21- மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் காதுகேளாத மாணவி ஒருவருக்கு ரூ.22 ஆயிரம் மதிப்பிலான காதுகேட்கும் கருவியை வழங்கிய குடும்பத்தினரை பல்வேறு தரப்பி னர் பாராட்டி வருகின்றனர்.  பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் விக்டர் மற்றும் டோரிஸ் விக்டர் ஆகியோரின் நினை வாக, டாக்டர். வனிதா சுரேஷ்குமார் மற்றும் மகன்  ரமேஷ்குமார் ஆகியோர் காட்டுச்சேரி, காரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த, திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் செவித்திறனற்ற எழை  மாணவிக்கு ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள காது கேட்கும் இயந்திரத்தை வழங்கியுள்ளனர். ஏழை மாணவிக்கு பெரும் உதவியை வழங்கியுள்ள குடும்பத்தினரை பல் வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

;