districts

img

எடை குறைவான உள்ள குழந்தைகளுக்கு சத்துமாவுடன் கூடுதலாக செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து  பிஸ்கட் பாக்கெட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாந்தோணி ஒன்றியம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மிகக் எடை குறைவான உள்ள குழந்தைகளுக்கு சத்துமாவுடன் கூடுதலாக செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து  பிஸ்கட் பாக்கெட்களை மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் வியாழனன்று வழங்கினார். நிகழ்வில் தனித்துணை ஆட்சியர் சைபுதீன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அலுவலர் குறள்செல்வி, கரூர் வட்டாரம் குழந்தை வளர்ச்சி திட்டஅலுவலர் ஜெயபிரதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.