districts

img

நெல் கொள்முதலை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்: விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், பிப்.9-  நெல் கொள்முதலை தனியாருக்கு விடக்கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு சனிக்கிழமை நடைபெற்ற மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்  என்.வி. கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தஞ்சை மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் பழனிஅய்யா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் தெரிவித்ததாவது:  விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லை, 1975 இல் துவங்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வருகிறது. விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் கிராமங்களில் செயல்பட்டு வருகின்றன.  குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் நிரந்தரக் கட்டி டங்களுடன் செயல்படும் கொள்முதல்  நிலையங்கள் உள்ளன. பல்லாயி ரக்கணக்கான ஊழியர்கள் இந்நிறு வனத்தில் பணியாற்றி வருகின்றனர். கொள்முதல் செய்யப்படும் நெல்லை தஞ்சாவூர் சேமித்து வைப்பதற்கான நிரந்தர குடோன்களும் உள்ளன.  கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்வதற்கான நவீன  அரிசி ஆலைகளையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தி வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லை பரவலான கொள்முதல் மூலம் இந்திய உணவுக் கழகத்திற்கு (FCI) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து கொடுத்து வரும் நிலையில், தற்போது ஒன்றிய அரசு தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் (NCCF) மூலம் நெல் கொள்முதல் செய்திட வேண்டுமென மாநில அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.  இந்த உத்தரவை செயல்படுத்திடும் வகையில் நடப்பாண்டில் (2024-25) டெல்டா மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் நெல்கொள்முதல் செய்திட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒன்றிய அரசு நிறுவனங்கள் மூலம் நேரடியாக நெல்கொள்முதல் செய்தால், மாநில அரசு வழங்கி வரும் ஊக்கத்தொகையை நிறுத்தி விடுவார்கள். இது விவசாயிகளை பாதிக்கும். எனவே, ஒன்றிய அரசு அறிவித்துள்ள தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு முழுக்க, முழுக்க ஒரு கூட்டுறவு நிறுவனமோ, பொதுத்துறை நிறுவனமோ அல்ல. இந்த கூட்டுறவு இணையத்தில் இடைத்தரகர்கள், தனியார் வியாபாரிகள், வாகன ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரும் இடம்பெறும் அமைப்பாகும்.  கொள்முதல் செய்வதற்கான எந்த உள்கட்டமைப்புகளும் இல்லாத தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு அனுமதியளிப்பது நாளடைவில் நெல்கொள்முதலை முழுக்க முழுக்க தனியார்மயமாக்கும் முயற்சியாகும். எனவே, தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்திட வேண்டும். மாநிலம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதலை செய்திட வேண்டும். ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ள தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் திட்டம் விவசாயிகளுக்கு எதிரானதாகும்.  ஒன்றிய அரசு விவசாயிகள் விரோத தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என நடைபெற விருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறை வேற்ற வேண்டும்” என்றார்.  

ஆர்ப்பாட்டத்தில் கரும்பு சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்க  செயலாளர் கோவிந்தராஜ், திருவை யாறு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.ராம், விதொச மாவட்டத் தலைவர் பிரதீப் ராஜ்குமார், விவசாய சங்க நிர்வாகிகள் உதய குமார், பாலு, கருப்பையா, சிபிஎம் மாநகரச் செயலாளர் எம். வடி வேலன், சிபிஎம் நிர்வாகிகள் கே. அபி மன்னன், என்.சரவணன், என்.குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாகப்பட்டினம்  திருக்குவளையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விச நாகை மாவட்டச் செயலாளர் கே. சித்தார்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்தும், மழையால் பாதிக்கப்பட்ட  சம்பா நெற்பயிர்களுக்கு காப்பீடு மற்றும் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.  மாநிலத் துணைத்தலைவர் வி.சுப்ரமணியன் உரையாற்றினார். மாவட்டத் தலைவர் எம்.என். அம்பிகாபதி, பொருளாளர் எஸ்.பாண்டியன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரியலூர்  அரியலூர் மாவட்டம் திருமானூரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவர் மணியன் தலைமை வகித்தார். இதில் சங்க மாவட்டச் செயலாளர் மணிவேல், ஒன்றிய செயலாளர் வரப்பிரசாதம், ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம், தமிழ்நாடு கரும்பு சங்க மாவட்டச் செயலாளர் ஜெகநாதன், மாவட்டத் தலைவர் கரும்பாயிரம் ஒன்றிய பொருளாளர் காமராஜ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சாமிதுரை, சமூக ஆர்வலர் பாளை  திருநாவுக்கரசு, சிறுபான்மை நலக்குழு மாவட்டத் தலைவர் சவுரிராஜன், மாதர்சங்க ஒன்றிய செயலாளர் கலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.