districts

img

பாஜக அரசிற்கு கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது நாகர்கோவிலில் தி.மு.க உண்ணாவிரதத்தில் அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேச்சு

நாகர்கோவில், ஆக.21-

       கல்வி உதவி தொகை வழங்கு வதாக ஏழை மக்களை பாரதிய ஜனதா அரசு ஏமாற்றியது. மக்களை  திசை திருப்பும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டுக்  கொண்டிருக்கிறது. பாஜக அர சிற்கு முடிவு கட்டும் கவுண்டன் தொடங்கிவிட்டது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தெரிவித்தார்.

     நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க. வின் உண்ணாவிரத போராட்டம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழு வதும் நடந்தது. குமரி மாவட்ட திமுக சார்பில் நாகர்கோவிலில் அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும்  நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் தலைமையில் உண்ணா விரதம் காலையில் தொடங்கியது. இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

      போராட்டத்தை பால்வளத் துறை அமைச்சர் த.மனோ தங்க ராஜ் தொடங்கி வைத்தார். அப் போது அவர் கூறியதாவது:

     அரசு பள்ளியில் படிக்கும் சாமா னிய வீட்டு பிள்ளையும் பிளஸ்-2 படித்துவிட்டு மருத்துவ படிப்பு அல்லது மேற்படிப்பு செல்ல வேண்டிய சூழ்நிலையில் அந்தப் படிப்பு போதாது நீட் தேர்வு வேண்டும் என்று கூறுகிறீர்கள். பனி ரெண்டாம் வகுப்பு தேர்வு என்பது  தகுதி தேர்வாகும். வசதி படைத்த வர்கள் நீட் தேர்வை பயன்படுத்தி மருத்துவக் கல்லூரிக்கு சென்று விடுவார்கள். ஆனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படும். இதனால் தான் நீட் தேர்வை தமிழக அரசு எதிர்த்து  வருகிறது.

     மணிப்பூர் சம்பவம் பற்றி எதிர்க்கட்சியினர் பேசிய பிறகு பிரதமர் மணிப்பூரில் எந்த பிரச்ச னையும் இல்லை என்று கூறி யுள்ளார். திமுக தலைவரைப் பற்றி  பேச பாரதி ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது. திமுக தலைவர் நமக்கு நாமே என்பதன் மூலமாக தமிழக முழுவதும் நடை பயணம் மேற் கொண்டு மக்கள் மத்தியில் எழுச்சி  ஏற்படுத்தினார். ஆனால் அண்ணா மலை மக்களை ஏமாற்றி வரு கிறார். அண்ணாமலை எதிர் கட்சித்  தலைவர்கள் யார் வேண்டுமானா லும் வாருங்கள் என்னுடன் நீட்  தேர்வு குறித்து விவாதிக்க தயா ராக இருக்கிறீர்களா என்கிறார் .

      சுங்கச்சாவடியில் மத்திய அரசு பல  கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளது. சாலை அமைப்ப திலும் ஊழல் செய்துள்ளது. தங்க ளது ஆதாயத்திற்காக மதத்தை அரசியலுக்காக பாரதிய ஜனதா அரசு பயன்படுத்தி வருகிறதது கல்வி உதவி தொகை வழங்கு வதாக ஏழை மக்களை பாரதிய ஜனதா அரசு ஏமாற்றியது. மக்களை  திசை திருப்பும் முயற்சியில் பாரதிய ஜனதா அரசு செயல்பட்டுக்  கொண்டிருக்கிறது.

    பாஜக அர சிற்கு முடிவு கட்டும் கவுண்டன் தொடங்கிவிட்டது. விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்  கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலை  டீசல் விலை, பொருட்களின் விலை  கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதை மக்கள் நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா  கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.