districts

img

நலத் திட்டங்களை கொண்டு சேர்க்கும் பணியை கூட்டுறவுத் துறை மேற்கொள்கிறது: அமைச்சர் பெருமிதம்

புதுக்கோட்டை, நவ.21 - ஏழை, எளிய மக்களின் நலத் திட்டங் களை கொண்டு சேர்க்கும் பணியை கூட்டுறவுத் துறை மேற்கொள்வதாக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற 70 ஆவது அனைத் திந்திய கூட்டுறவு வார விழாவில் அவர்  மேலும் பேசுகையில், “கூட்டுறவுத் துறையின் தாய்மடியாக தமிழ்நாடு உள்ளது. இங்குள்ள 2.5 கோடி ரேசன்  கார்டுதாரர்களுக்கு உணவுப் பொருட் களை விநியோகம் செய்வதற்காக 35 ஆயிரம் ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.  ஏழை. எளிய மக்களுக்கான நலத்  திட்டங்களைக் கொண்டு சேர்க்கும் பணி யைக் கூட்டுறவுத் துறை மேற்கொண்டு வருகிறது. அதேபோல, கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணி யிலும் கூட்டுறவுத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றார். சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு அமைச்சர்கள் விருதுகளை வழங்கி னர். மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மாநில கூட்டுறவுப் பதிவாளர் என். சுப்பையன், சட்டப்பேரவை உறுப்பி னர்கள் எம்.சின்னதுரை, வை. முத்து ராஜா, திமுக மாவட்டச் செயலர் கே.கே.  செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக விழாவுக்கு, மாவட்ட  ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகித்தார். கூட்டுறவு இணைப் பதிவா ளர் கோ.ராஜேந்திரபிரசாத் வரவேற்றார்.