தஞ்சாவூர், ஜூன்11 -
பேராவூரணி அரசு மருத்துவமனை புதிய கட்டடப்பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், காமராஜர் அரசு மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரு கிறது. இந்த மருத்துவமனைக் கட்டடம் பழுத டைந்து விட்டது. போதிய மருத்துவர்கள், நவீன கருவிகள், செவிலியர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் இல்லாத நிலையும் உள்ளது.
இது குறித்து பேராவூரணி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், சட்டமன்றத்தில் பேராவூரணி அரசு மருத்துவ மனைக்கு புதிய கட்டடம் அமைத்துத் தர வேண்டும். கூடுதல் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். நவீன கருவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில், பேராவூரணி அரசு மருத்து வமனைக்கு ரூபாய் 5.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் உத்த ரவு பிறப்பித்தார். இந்நிலையில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் திலகம், பேரா வூரணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காமேஸ்வரி ஆகியோர், சட்ட மன்ற உறுப்பினர் என்.அசோக்குமாரை சந்தித்து பேசினர்.
அப்போது கட்டடப் பணிகள் விரைவில் துவங்கும் என தெரிவித்துள்ளனர். மேலும், கட்டடப்பணிகள், மருத்துவமனை வளர்ச்சிக் கான தேவைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் கூறுகையில், “தற்போது உள்ள அரசு மருத்துவமனை கட்ட டத்தை இடித்து விட்டு, புதிய மருத்துவ மனை கட்டிடம் கட்ட அரசு அனுமதி அளித்துள் ளது. நவீன உடற்கூறாய்வு கூடம் மற்றும் நவீன கருவிகள் வரவுள்ளது. தற்போது வரும் நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாத வகை யில், புதிய கட்டடம் கட்டும் பணிகள் இருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது” என்றார்.