பெரம்பலூர், ஜன.28 - பெரம்பலூர் மாவட்ட சிஐடியு, விவேகானந்தர், எல்.பி.எப் ஆகிய மூன்று ஆட்டோ வாகன ஓட்டுநர்கள் சங்கங்கள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியு றுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு படுவதற்கு அனுமதி கேட்டு பெரம்ப லூர் காவல் நிலையத்தில் மனு கொடுத்திருந்தனர். ஆனால் காவல் துறையால் அனுமதி மறுக்கப்பட்டிருந் தது. இருப்பினும் அவர்கள் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற் காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத் துக்கு ஆட்டோக்களுடன் திங்கள்கிழமை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இத னால் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஆட்டோக் களுக்கு அபராதம் விதிக்க போக்கு வரத்து காவலர்களும் தயார் நிலை யில் இருந்தனர். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் காத்திருப்புப் போராட்டத்தை கை விட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபுவிடம் மனு அளித்தனர். அம்மனுவில், “பெரம்பலூர் மாவட்டத்தில் 450-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. பெரம்பலூர் நகரத்தில் சாலை வசதி, போக்குவரத்து நெருக்கடி போன்ற காரணங்களால் புதிய ஆட்டோக் களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அனுமதிச் சீட்டு வழங்குவது தடை செய்யப்பட்டு, தற்போதும் தடை அமலில் உள்ளதாக வட்டார போக்கு வரத்து அலுவலகம் மூலம் தெரி விக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வட்டார போக்குவரத்து அலுவலக தடை அமலில் உள்ளதால் புதிய அனு மதிச் சீட்டு வழங்கப்படாது என்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் புதிதாக சி.என்.ஜி, 45 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக அறிகிறோம். தடை அமலில் இருக்கும்போது மேற்கண்ட தடை சிஎன்ஜி ஆட்டோக்களுக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே சிஎன்ஜி ஆட்டோக்களுக்கு புதிய அனுமதிச் சீட்டு வழங்கும் நடவடிக்கையை கை விட்டு, ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர். புதிய ஆட்டோக்களுக்கு பதிவு நிறுத்திவைப்பு மனு குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேலுபிரபு தலைமை யில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து அவர்களிடம் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு)ரவி, புதிய சி.என்.ஜி. ஆட்டோக்களை பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்படும். புதிய ஆட்டோக் களுக்கு தற்காலிகமாக அனுமதி வழங்கவோ, பதிவு செய்யவோ மாட்டோம் என உறுதியளித்து எழுதிக் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மதியம் 2 மணி வரை பெரம்பலூர் நகர் பகுதியில் எந்த ஆட்டோக்களும் ஓடவில்லை.