கரூர், ஜூலை 26-
குரும்பப்பட்டி மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும் எனத் தெரிவித்ததால், போராட்டம் ஒத்திவைக் கப்பட்டது.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம், பவித்திரம் கிராமம், குரும்பப்பட்டியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டும் எனக் கோரி பல ஆண்டுகளாகக் கரூர் மாவட்ட நிர்வாகம், புகளூர் வட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களிடம் கட்டுமானத் தொழி லாளர் சங்கத்தின் குரும்பப்பட்டி கிளை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை வீட்டுமனைப் பட்டா கொடுக்காமல் கோரிக்கை மனுவை, அரசு அலுவலர்கள் கிடப்பில் போட்டுள்ள னர்.
இதனைக் கண்டித்தும், உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கோரியும் சிஐடியு குரும்பப்பட்டி கிளை சார்பில் வியாழனன்று (ஜூலை 27) புக ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என அறி விக்கப்பட்டது.
போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, புகளூர் வட்டாட்சியர் தலைமையில் சுமூகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், உடனடியாக அனைவருக்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கிட விரைந்து நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக் கப்பட்டது.
இதனால் போராட்டம் தற்காலி கமாகக் கைவிடப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் ப.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றிய செயலாளர் எம்.ராஜேந்திரன், சங் கத்தின் பவித்திரம் கிளைச் செயலாளர் செந்தில்குமார், தலைவர் முத்துசாமி, பொருளாளர் சகுந்தலா மற்றும் உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.