தஞ்சாவூர், ஜூன்.27 -
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை பத்துமணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் தாங்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்க வேண்டும்.
விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு, விவசாயம் சார்ந்த தங்கள் கருத்துக்களை கோரிக்கைகளாகத் தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளார்.