தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் சுடர் மாற்றுத் திறனுடையோர் பள்ளிக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இதில் தலைவர் சக்திவேல், செயலர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோன்று அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் சார்பில், பெற்றோர் இல்லாத 2 பெண் குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு, இனிப்பு, ரூ.1,000 ஆகியவற்றை தலைவர் ரவிச்சந்திரன் வழங்கினார்.