சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்ற வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல்துறை சார்பில் காவலர்கள் பங்கேற்ற இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமை வகித்தார். இதில் காவலர்கள் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.