தஞ்சாவூர், டிச.28 - தஞ்சாவூர் மாவட்டம், திரு மண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நலிவடைந்த கார ணத்தால் 2018-19 ஆம் ஆண்டு முதல் அரவை நடைபெறவில்லை. இதனால் அந்த சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவ சாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கரும்புத்தொகை நிலு வையில் இருந்தது. விவசாயிகள் சார்பில் கோரப்பட்ட நிலுவைத் தொகையில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (NCLT)–யில் 2.5.2022 அன்றைய தீர்ப்பின் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையில் 57.36 சதவீதம் அனுமதிக்கப்பட்ட தொகையாக விவசாயிகளுக்கு வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 29.96 கோடி ரூபாய் நிலுவைத் தொகை கலைத் தல் அலுவலர் மூலம் விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கேஒய்சி விபரம் பெறப்படாத காரணத்தால் 2.97 கோடி ரூபாய் நிலுவைத் தொகை கலைத்தல் அலுவலர் வசம் உள்ளது. தற்போது, கலைத்தல் அலுவலரால் நாளேடுகளில் இது குறித்த செய்தி வெளியிடப்பட் டுள்ளது. இதுவரை ekyc மூலம் விண்ணப் பிக்காத விவசாயிகள் https://www.tasugars.in//investorinfo.html என்கிற வலைதளத்தில் தமிழ் அல்லது ஆங்கில விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உடன் விண்ணப்பித்திட வேண்டும். தவறும் பட்சத்தில், திவால் மற்றும் திவால் சட்டம் 2016 (Insolvency and Bankruptcy Code 2016) சட்டத்தின் கீழ், குறிப் பிடப்பட்டுள்ளபடி மீதம் உள்ள செலுத்தப்படாத தொகை கை யாளப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. கலைத்தல் அலுவலரின் முக வரி, ராமகிருஷ்ணன் சதாசிவன், ( IP Reg No: IBBI/IPA-001/IP-P00108/2017-18/10215) கண் காணிப்புக் குழுவின் தலைவர், திரு ஆரூரான் சுகர்ஸ் லிமிடெட், முகவரி : பழைய எண்: 22, புதிய எண் 28, மேனாட் தெரு, புரசை வாக்கம், சென்னை – 600 007, கைபேசி எண் 94444 55982. மின்னஞ் சல் முகவரி: thiruarooransugars ltd @gmail.com/ sadasivanr@gmail.com எனவே (NCLT) தீர்ப்பின்படி 57.36 சதவீதம் அனுமதிக்கப்பட்ட தொகை பெறாத விவசாயிகள், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு கேஒய்சி விவரங்களை 31.12.2023-க்குள் கலைத்தல் அலுவலரிடம் சமர்ப்பித்து உரிய தொகையினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.