தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த உத்தாணியில் தொடங்கும் பைபாஸ் சாலையில் சில இடங்களில் குப்பைகள் கொட்டப் படுகின்றன. கோழி இறைச்சி கழிவுகளையும் கொட்டி விட்டுச் செல்கின்றனர். இதனால் சுற்றுச் சூழல் மாசு படுவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், இந்தச் சாலையோரம் மண்டியுள்ள தேவையற்ற செடிகளை அகற்றி விட்டு, பனை, வேம்பு, புங்கன், புளி, நெல்லி உள்ளிட்ட மரக் கன்றுகளை நட்டு பராமரிக்கலாம் என்று அப்பகுதி வலியுறுத்தியுள்ளனர்.