districts

img

தஞ்சை வேட்பாளர் முரசொலி பேராவூரணியில் பிரச்சாரம்

தஞ்சாவூர், மார்ச் 30 - இந்தியா கூட்டணி சார்பில், தஞ்சை  நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலி சனிக்கிழமை பேராவூரணி சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட அலிவலம், உதய சூரியபுரம், இடையாத்தி, வாட்டாத்திக் கோட்டை, திருச்சிற்றம்பலம், புனல் வாசல், ஒட்டங்காடு, கொன்றைக்காடு, செங்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப் பில் ஈடுபட்டார்.  அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் நிறை வேற்றிய பல்வேறு திட்டங்களை, சாத னைகளைச் சொல்லி, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு வந்துள் ளோம். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒன்றிய அரசிட மிருந்து போதிய நிதி கிடைப்பதில்லை. எனவே நம்முடைய கூட்டணி அரசு  அமையுமானால் அனைத்து திட்டங் களையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு  சென்னையிலும், தென் மாவட்டங்களி லும் பெரிய அளவில் வெள்ளச் சேதம்  ஏற்பட்ட போது, பாதிக்கப்பட்ட மக்க ளைச் சந்திக்க வராத பிரதமர் மோடி,  தற்போது நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பலமுறை வாக்குக் கேட்டு தமிழகத்திற்கு வந்துள்ளார். தமிழக மக்கள் இதை நினைவில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்பதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். பிரச்சார பயணத்தில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநி மாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பி னர்கள் கா.அண்ணாதுரை (பட்டுக் கோட்டை), நா.அசோக்குமார், கூட்ட ணிக் கட்சிகளின் தலைவர்கள், ஆதரவு  அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விவசாயத் தொழிலாளர்கள் வரவேற்பு பிரச்சாரத்தின் போது, இடை யாத்தி தெற்கு பகுதியில் வயல்வெளி யில் நடவுப் பணியில் நூற்றுக்கணக் கான பெண்கள் ஈடுபட்டிருந்தனர். வேட்பாளர் முரசொலி பிரச்சார வேனை  விட்டு கீழே இறங்கி, அங்கிருந்த பெண்களிடம் வாக்குச் சேகரித்தார். அப்போது தொழிலாளர்கள், திமுக வுக்குத்தான் எங்கள் வாக்கு என்று கூறி  வரவேற்றனர்.