திண்டுக்கல், ஜுன் 28-
திண்டுக்கல் அருகே 600 ஆண்டு பழமையான சௌந்திரராஜ பெருமாள் கோவில் எனப்படும் தாடிக் கொம்பு அழகர் கோவில் கும்பாபிசேகம் ஜூன் 28 அன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்புவில் அமைந்துள்ளது சௌந்தரராஜா பெருமாள் கோவில். கிருஷ்ணதேவராயரின் வாரிசுகளான அச்சுத தேவ ராயர், ராமதேவராயரால் கட்டப்பட்ட சுமார் 600 ஆண்டு களுக்கு முன்பு உருவான தொன்மையான கோவிலா கும். இந்த கோவில் மதுரை அழகர் கோவிலுக்கு வடக்கு வாசல் கோவில் என்றும் கூறப்படுகிறது.
இந்த கோவிலில் 12ஆண்டுகளுக்கு பின்பு மஹா கும்பாபிஷேக விழா புதனன்று நடைபெற்றது. இதில் திருப்பூர்,ஈரோடு, கோயமுத்தூர்,கரூர், சேலம், திண்டுக் கல், மதுரை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் உள்ளூரிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.