மயிலாடுதுறை, அக்.13 - மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளராக டி.ஜி.ரவிச் சந்திரன் தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது ஒன்றிய மாநாடு, மயிலாடுதுறை அருகேயுள்ள சோழம் பேட்டை கே.ஜி.ஆர் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. மூத்த தோழர் எம்.மணி, ஆர்.சரிதா ஆகி யோர் தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை கோவி.சின்னையன் ஏற்றி வைத்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.ஸ்டா லின் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கணேசன் உரையாற்றினார். 11 பேர் கொண்ட ஒன்றி யக் குழு தேர்வு செய்யப் பட்டு, ஒன்றியத்தின் புதிய செயலாளராக டி.ஜி.ரவிச் சந்திரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் நிறைவுரை யாற்றினார். தலைஞாயிறு என்பிகே ஆர்ஆர் சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்கிட வேண்டும். மாப்படுகை, நீடூர் பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.