கரூர், நவ.22 - விவசாய நிலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாபெ ரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், மத்தகிரி கிராமத்தில் ஜவுளி பூங்கா அமைக்க விவசாயிகளின் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண் டித்தும், ஜவுளி பூங்கா அமைக்கும் பணியை கைவிட கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடவூர் வட்டக் குழு சார்பில் கடவூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் பெ.வீரமலை தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாநில துணைத்தலைவர் கே.முகமது அலி கண்டன உரையாற்றி னார். மாநிலக் குழு உறுப்பினர் வி. சிதம்பரம், மாவட்டச் செயலாளர் கே. சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் பி.பழனிவேல் ஆகியோர் பேசினர். பின்னர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருந்து தரகம் பட்டி பேருந்து நிலையம் வரை பேரணி யாக வந்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.