districts

ஊரைவிட்டு ‘ஒதுக்கப்பட்ட’ குடும்பத்திடம் வரி வசூல் செய்யப்படும்

பொன்னமராவதி, ஆக.6 -

      ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப் பட்ட குடும்பத்தினரிடம் வரி வசூல்  செய்யப்படும் என ஊர் முக்கியஸ் தர்கள் உறுதி அளித்துள்ளனர்.

     புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி அருகே உள்ள கட்டையாண் டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மணி. ஊர் முக்கியஸ்தர்கள், இவரது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து வரி வசூல் செய்யாமல் இருந்தனர்.  

    இதுகுறித்து ராஜாமணி வட்டாட் சியரிடம் புகார் அளித்த நிலையில், வட்டாட்சியர் தலைமையில் இருமுறை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப் பட்ட மாதர் சங்கத்தைச் சேர்ந்த ராஜா மணி குடும்பத்தினரிடம் ஊர் வரி வசூல் செய்ய வேண்டுமென உத்தரவிடப் பட்டது. ஆனால் கோவில் திருவிழாவின்  போது, ராஜாமணி குடும்பத்தினரிடம், ஊர் முக்கியஸ்தர்கள் வரி வசூல் செய்ய வில்லை. இது தொடர்பாக, ராஜாமணி  வட்டாட்சியரிடம் புகார் செய்ததற்காக, அவர் மீது ஊர்க்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

   இதைக் கண்டித்தும், வட்டாட்சி யரின் உத்தரவை அமல்படுத்தக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமையில் சாலை மறியல் போராட் டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆக.5 அன்று பொன்னமராவதி வட்டாட்சியர் முன்னிலையில் 3 ஆவது  முறையாக சமாதான கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில், மேற்படி கிராமத்தில் வசித்து வரும் ராஜாமணி குடும்பத்தின ரிடம் அனைத்து பொது நிகழ்ச்சிகள்  மற்றும் விழாக்களிலும் வரி வசூல்  செய்யப்படும் என ஊர் முக்கியஸ் தர்கள் உறுதி அளித்தனர். அதுபோல, ஊரில் இறப்பு நிகழ்வு நடைபெறும் வீட்டில் வசூல் செய்யப்படும் கட்ட மொய் பணத்தையும், ராஜாமணி குடும்பத்தாரிடம் பெற்றுக் கொள்வோம் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை மீறுபவர்கள் மீது உரிய சட்ட நட வடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

    இனிவரும் காலங்களில், இது தொடர்பாக காவல்துறையினர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வட்டாட்சியர் கேட்டுக்  கொண்டார். இதற்கு காவல் ஆய்வா ளர் ரமேஷ், இந்தப் பிரச்சனை தொடர் பாக நடைபெறும் சமாதான கூட்டம் இதுவே கடைசி எனவும், இந்த கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவை கடுமையாக  அமல்படுத்துவோம் எனவும், உத்த ரவை மீறுபவர்கள் மீது காவல்துறை உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யும் எனவும் தெரிவித்தார். இதனை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.  

   இந்த சமாதானக் கூட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  நாராயணன், ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், நகரச் செயலாளர் குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர் நல்ல தம்பி, மாதர் சங்க ஒன்றியச் செயலா ளர் மதியரசி, ராஜாமணி குடும்பத்தி னர் பங்கேற்றனர்.