தஞ்சாவூர்/திருவாரூர், செப்.21 - டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் தமிழகம் தழுவிய மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் செப்.20 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறு கிறது. இதையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் பிரச்சார துவக்க நிகழ்ச்சி தஞ்சா வூர் பாலாஜி நகரில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. பிரச்சாரத்தை மாநில சம்மேளன பொதுச் செய லாளர் கே.திருச்செல்வன் துவக்கி வைத்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெய பால் கோரிக்கைகளை வலி யுறுத்திப் பேசினார். மாவட்டச் செயலாளர் க. வீரையன், மாவட்டத் தலை வர் க.மதியழகன், மாவட்டப் பொருளாளர் ஏ.ஜி.பன்னீர் செல்வம், மாவட்ட நிர்வாகி கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சங்க உறுப் பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூர் ரயில் நிலை யம் அருகே சனிக்கிழமை நடந்த மக்கள் சந்திப்பு பிரச் சார இயக்கத்திற்கு மாவட்டத் தலைவர் பி.என். லெனின் தலைமை வகித்தார். அமைப் பின் மாநில பொதுச் செய லாளர் கே.திருச்செல்வன் மக்கள் சந்திப்பு இயக் கத்தை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார். டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலை வர் எம்.கே.என். அனிபா, மாவட்டச் செயலாளர் வி.சிவ பாலன், பொருளாளர் ஏ. முத்துவேல் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.