மயிலாடுதுறை, நவ.20 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா சனிக்கிழமை (நவ.19) துவங்கியது. நவ.25 ஆம் தேதி வரை நடைபெற வுள்ள இவ்விழாவையொட்டி, பார்வையா ளர்கள், மாணவர்கள் கட்டணமின்றி கோட்டை மற்றும் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என டேனிஷ் கோட்டை அலுவலர் அறிவித்துள்ளார். கி.பி 1600 முதல் 1634 வரை தரங்கம்பாடி யை ஆட்சி செய்த டேனிஷ்காரர்கள் (டென் மார்க் நாட்டினர்) 1620-ல் கடற்கரைக்கு மேற்கே டேனிஷ் கலை நுணுக்கத்துடன் கோட்டையை கட்டி தங்களது அதிகார மையமாக பயன்படுத்தினர். 402 ஆண்டுகள் ஆன நிலையில், இன் றும் கம்பீரமாய் காட்சியளிக்கும் இக் கோட்டையில் செயல்படும் அகழ் வைப்ப கத்தில் 14,15,16 ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்டுத்திய பொருட்கள், 1200 ஆம் ஆண்டு கால சிலை கள், பீங்கான், மண், மரத்தாலான பல நூறு ஆண்டுகள் பழமையான பொருட்கள், டேனிஷ் அரசர்கள், ஆளுநர்களின் புகைப் படங்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போர் கருவிகள். 16 ஆம் நூற்றாண்டில் தரங்கம் பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங் கள் என ஏராளமான வரலாற்று சின்னங் களை பத்திரப்படுத்தி காட்சிக்கு வைத் துள்ளனர். மேலும் கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டக வைப் பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகள், பழமை மாறாமல் புதுப் பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்று சின்னங்கள் நிறைந்த இக் கோட்டையை நவம்பர் 25 வரை எந்த வித கட்டணமுமின்றி பொதுமக்கள், மாண வர்கள், இளைஞர்கள் பார்வையிடலாம். இதில், தொல்லியல்துறை அதிகாரிகள் காட்சிக்கு உள்ளவை குறித்து உரிய விளக்கமளிக்க உள்ளனர்.