districts

img

‘தஞ்சை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ தொடங்கியது

தஞ்சாவூர், ஜூலை 13- தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி அருகேயுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய விளை யாட்டுத் திடலில், தமிழ்நாடு அரசின்  கலை பண்பாட்டு துறை சார்பில் ‘தஞ்சை சங்கமம் நம்ம ஊரு திரு விழா’ மற்றும் தஞ்சாவூர் உணவுத் திரு விழா வெள்ளிக்கிழமை மாலை தொ டங்கியது. இந்த விழாவை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், கும்பகோணம் மேயர் க.சர வணன் உள்ளிட்டோர் மேளம் கொட்டி  தொடங்கி வைத்தனர். மேலும் இசை,  நாடக, ஓவியம் உள்ளிட்ட கலைஞர் களுக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி ஆகிய விருதுகள் வழங்கப் பட்டன.  இதைத் தொடர்ந்து, அந்தோணி தாசன் குழுவினரின் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, சனி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ள இவ்விழாவில் ஏறத்தாழ நூறு உணவு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பாரம்ப ரிய உணவு வகைகள் முதல் இன்றைய  கால உணவு வகைகள் வரை இடம் பெற்றுள்ளன. மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கட லூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களி லிருந்து ஏறத்தாழ 500-க்கும் அதிக மான நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்கும் நையாண்டி மேளம், கர காட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், கோ லாட்டம், பம்பையாட்டம், மள்ளர் கம்பம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, பொம்மலாட்டம், நாட்டுப்புற ஆடல் பாடல் உள்ளிட்ட கிராமிய கலை விழா  நடைபெறுகிறது. தொடக்க விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், தஞ்சாவூர் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் இரா.மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத்  தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.