தஞ்சாவூர், மார்ச் 27- தஞ்சாவூர் நாடாளு மன்றத் தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள, குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரி, வாக்கு எண்ணும் மையத்தினை தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுப் பார்வையாளர் கிகேட்டோ சேம, காவல்துறை பார்வையாளர் மரு.எஸ்.டி.சரணப்பா ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் தலைமையில் புதன் கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கு, தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள குந்தவை நாச்சி யார் மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில், மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேரா வூரணி சட்டமன்றத் தொகுதிகள் உள்ள டங்கிய வாக்கு எண்ணும் மையத்திற்கான பூர்வாங்கப் பணி ஜூன் 4 (செவ்வாய்க் கிழமை) அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து அதற்கான முன்னேற் பாடு பணிகள் குறித்து, புதன்கிழமை இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப் பட்டுள்ள பொதுப் பார்வையாளர் மற்றும் காவல்துறை பார்வையாளர் ஆகியோரு டன், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற் கொண்டனர். ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், வரு வாய் கோட்டாட்சியர் இலக்கியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.