தஞ்சாவூர், மே 7- உலக ஆஸ்துமா தினத்தையொட்டி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனையின் நுரையீரல் மருத்துவத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை ஆஸ்துமா நோயை ஆரம்ப நிலையி லேயே கண்டறிவதற்கான விழிப்பு ணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோருக்கு பரிசோ தனை செய்யப்பட்டது. அதனைத் தொ டர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமையில் நுரையீரல் மருத்துவத்துறை, பொது மருத்துவ துறையின் மாணவ-மாணவி கள் மற்றும் மருத்துவர்கள் மனிதச் சங்கிலி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ஆஸ்துமா வராமல் தடுப்பது எப்படி குறித்து உறுதிமொழி எடுத்த னர். பின்னர் மருத்துவக் கல்லூரி முதல் வர் டாக்டர் பாலாஜிநாதன் செய்தியாளர்களி டம் கூறிய தாவது: உலக ஆஸ் துமா தினத்தை யொட்டி பரிசோ தனை முகாம், மனிதச் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. தஞ்சை மருத்துவக் கல்லூ ரிக்கு மாதத்திற்கு சுமார் 1,500 வெளி நோயாளிகளுக்கு ஆஸ்துமா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்துமா நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். ஆஸ்துமா என்பது குணப்படுத்தக் கூடிய நோய்தான். ஆனால் சிலரிடம் ஆஸ்துமா பற்றி தவறான புரிதல் உள்ளது. அவர்களுக்கு ஆஸ்துமா குறித்து போதிய விழிப்புணர்வு தேவை. தூசு, புகைப்பிடித்தல், கெமிக்கல் போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்படுப வர்களுக்கு ஆஸ்துமா வரும். மூச்சு விடு வதில் அடிக்கடி சிரமம் ஏற்பட்டால், அவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட வர் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம். பனிக்காலம் மட்டுமின்றி கோடை காலத்திலும் ஆஸ்துமா தாக்கும். நாம் தான் கவனமாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆஸ்துமாவுக்கு தற்போது பல நவீன சிகிச்சை முறை கள் வந்துவிட்டன. அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். குறிப்பாக புகைப்பிடித்தல் பழக்கம் உள்ளவர்கள் அதனை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சிகளில் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் ராம சாமி, நிலைய மருத்துவர் செல்வம், நுரையீரல் மருத்துவப் பிரிவு துறை தலைவர் அன்பானந்தன், பொது மருத்துவப் பிரிவு துறை தலைவர் கண்ணன், பதிவாளர் மணிமாறன், நுரை யீரல் மருத்துவப் பிரிவு உதவி பேராசிரி யர்கள் ராமசாமி, நடேஷ், கிருபானந்தம் மற்றும் துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், செவிலியர் கண்காணிப் பாளர்கள், செவிலியர்கள், முதுநிலை, இளநிலை, பாரா மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.