தஞ்சாவூர், ஆக.8-
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் “9வது தேசிய கைத்தறி தின விழாவை” மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் திங்கள்கிழமை துவக்கி வைத்தார்.
பின்னர் ஆட்சியர் கூறுகையில், “தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், சென்ற ஆண்டு தஞ்சாவூர் மண்டல விற்பனை நிலையங்களில் ரூ.10 கோடி அளவிற்கு விற்பனை செய்யப் பட்டது. இந்த ஆண்டு விற்பனைக் குறி யீடாக ரூ.20 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். “கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்” என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப் பட்டு, 12வது மாத சந்தா தொகையை கோ- ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை, 30 விழுக்காடு அரசு தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது. புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவை கள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மற்றும் தமிழ கத்தின் பல்வேறு பகுதி நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலை கள் உட்பட பல ரகங்கள் உள்ளன.
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் தேசிய கைத்தறி தின விழா கொண்டாட்டம் மற்றும் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனை ஆக.20 வரை நடைபெறும்” என்றார்.