districts

img

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்

தென்காசி,ஜன. 7- தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 7 செவ்வாயன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.   வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனே நிரப்புதல். கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் இப்பொழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு உரிய பணியிடங்களை நிரப்புதல். உதவி இயக்குநர் நிலையில் நேரடி நியமனங்களை அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 10 சதவிகிதத்திற்கு மிகாமல் நிரப்புதல்.  தமிழக முதல்வரின் வாக்குறுதிகளில் ஒன்றான கடந்த கால வேலை நிறுத்த நாட்களை வரன்முறை படுத்துதல்.போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 221  ஊழியர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.