புதுக்கோட்டை, டிச.11 - அண்ணா, கலைஞரைத் தொ டர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசும் மகாகவி பாரதியாரைப் போற்றிக் கொண்டாடி வருகிறது என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. புதுக்கோட்டையில் திங்கள் கிழமை நடைபெற்ற புதுக்கோட் டைத் தமிழ்ச் சங்கத்தை துவக்கி வைத்தும், பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத் தைத் திறந்து வைத்தும் அமைச்சர் பேசியதாவது: பாரதியாரின் நினைவு நூற்றாண் டையொட்டி, அவரது நினைவு நாளை மகாகவி நாளாகக் கடைப் பிடிப்பது, பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகளைத் தொகுத்து ‘மன தில் உறுதி வேண்டும்’ என்ற நூலாக்கி 37 லட்சம் பிரதிகள் அச் சிட்டு, மாணவர்களுக்கு வழங்கு வது என்பன உள்ளிட்ட 14 வகை யான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதற்கு முன்பு பாரதியார் பிறந்த இல்லத்தை நாட்டுடைமை ஆக்கியதுடன், அதனை வர லாற்றுச் சின்னமாகவும் அறிவித் தார். பாரதியார் மக்கள் கவி எனப் போற்றியவர் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையி லான அரசும் பாரதியாரைப் போற்றிக் கொண்டாடி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, கவிஞர் ப.வெங்க டேசன் எழுதிய “நான் சந்தித்த மனி தர்களில் தங்கம் மூர்த்தி” என்ற நூலை, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட காரைக் குடி அழகப்பா பல்கலைக்கழகத் தின் முன்னாள் துணைவேந்தர் சொ. சுப்பையா பெற்றுக் கொண்டார். விழாவுக்கு, புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவி ஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித் தார். ஞானாலயா பா.கிருஷ்ண மூர்த்தி, புதுக்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் வை. முத்து ராஜா, கவிஞர் சிகரம் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர். ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி மேலும், புதுக்கோட்டையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் திங்கள் கிழமை நடைபெற்ற ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற பயிற்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.என்ஹரிஹரன், பைப் ஸ்டார் நிதி நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணன், மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் மா.மஞ்சுளா, கவிஞர் தங்கம்மூர்த்தி உள்ளிட் டோர் பேசினர்.
மழையால் இழந்த கல்விச் சான்றிதழ்களை பள்ளிகளிலேயே மீண்டும் பெறலாம்
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங் களில் மழை வெள்ளத்தால் பள்ளிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் மீண்டும் அந்தந்தப் பள்ளிகளிலேயே வழங்க (திங்கள், செவ்வாய்) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதேபோல, பள்ளி தொடங்கும் நேரத்தில் நடைபெறும் வணக்கக் கூட்டத் தின்போது மழைக்கால பாதிப்புகளை எதிர்கொள்ளும் அறிவுரைகளை வாசிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவர் ஈரமாக உள்ள பள்ளிக் கட்டிடங்க ளில் நிச்சயமாக மாணவர்கள் தங்க வைக்கப்பட மாட்டார்கள். மாணவர் களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வாறு பள்ளிகளை இயக்குவதற்கு நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.