districts

img

ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது: கி.வீரமணி

தஞ்சாவூர், ஜூலை 24-  காவிரி நீர் உரிமை கோரி தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம், திராவி டர் கழகத் தலைவர் கி.வீர மணி தலைமையில் நடை பெற்றது. இதி திராவிடர் கழக தலை வர் கி.வீரமணி பேசுகையில், “கர்நாட காவில் உள்ள விவசாயிகளுக்கும் தண்ணீர் வேண்டும். தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கும் தண்ணீர் வேண்டும்.  நாம் இரு மாநில விவசாயிகளையும் மதிக்கிறோம். ஆனால் கர்நாடகாவில் உள்ள குறுகிய புத்தியுடைய சில அர சியல் கட்சியினர்தான் தண்ணீர் விடக் கூடாது என போராட்டம் செய்கின்ற னர்.  காவிரி நடுவர் மன்றம் அமைப்பதற் காக நாம் போராடிய போது, பலரும்  அதனை செய்து தராத போது, நமக்காக  காவிரி நடுவர் மன்றம் அமைத்துத் தந்த வர் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கை  நாம் மறந்துவிடக் கூடாது.  ‘நண்டை சுட்டு நரியை காவல் வைத்தது போல்’ தமிழகத்திற்கும் கர்நா டகத்திற்கும் இடையே நதிநீர் பிரச் சனை உள்ளபோது, கர்நாடக மாநிலத் தைச் சேர்ந்தவரை சம்பந்தப்பட்ட துறைக்கு, ஒன்றிய இணை அமைச்ச ராக நியமித்து இருப்பது, ஒன்றிய பாஜக  அரசின் குறுக்கு புத்தி ஆகும். இதனை  இந்தியா கூட்டணி கட்சியினர் எதிர்த்த னர்.  நிதிநிலை அறிக்கையை ஒன்றிய பாஜக அரசு அரசியல் ஆயுதமாக மாற்றி  உள்ளது. தமிழகத்தை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக் கையில், தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை. தமிழகத்திற்கான திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. வெள்ள நிவாரணம் நமக்கு வழங்கப் படவில்லை. மாறாக குறிப்பிட்ட சில வட  மாநிலங்களுக்கு மட்டும் வெள்ள நிவா ரண நிதியாக ரூ.11,500 கோடி ஒதுக்கப் பட்டிருக்கிறது.  தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர், எனக்கு தமிழ கம் ரொம்பப் பிடிக்கும். தமிழர்களை  பிடிக்கும். திருக்குறள் பிடிக்கும் என்றெல் லாம் பேசிச் சென்றார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழ கத்தின் மேல் வெறுப்பாக உள்ளார் கள். எனவே வஞ்சிக்கப்படுகிற தமிழ் நாட்டிற்கு வாழ்வளிக்கும் விதமாக நாம்  உரிமை போரை முழக்கம் செய்ய வேண்டிய நேரம் வரும்.  இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து  முடிவெடுப்போம். நமக்கு நீர் பிரச்சனை யும் முக்கியம், நிதிப் பிரச்சனையும் முக்கியம். எனவே, எங்களை அடுத்த கட்ட போராட்டத்திற்கு தள்ளிவிட வேண் டாம்” என்றார். இதில் திமுக எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), க. அன்பழகன் (கும்பகோணம்), நா.அசோக் குமார் (பேராவூரணி), தஞ்சாவூர் மாநக ராட்சி மேயர் சண்.ராமநாதன், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லர் சின்னை.பாண்டியன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலர்  முத்து.உத்திராபதி, மாநகர-மாவட்ட  காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்தி ரன், மதிமுக தெற்கு மாவட்டச் செய லர் வி.தமிழ்செல்வன், விடுதலை சிறுத் தைகள் கட்சி மத்திய மாவட்டச் செயலர்  கோ.ஜெய்சங்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் எஸ். எம்.ஜெயினுலாபுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை செயலா ளர் ஐ.எம்.பாதுஷா, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அமர்சிங் மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தினர் பேசி னர்.