தஞ்சாவூர், மே 14 -
நிலம், நீர்நிலைகளை தனியா ருக்குத் தாரைவார்க்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை தமிழ் நாடு அரசு திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தின் நன்மை-தீமைகள் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சா வூரில் கருத்தரங்கம் நடைபெற் றது. தஞ்சாவூர் மாவட்டச் செயலா ளர் என்.வி.கண்ணன் தலைமை யில் நடைபெற்ற கருத்தரங்கில் பங் கேற்று மாநிலத் தலைவர் பெ. சண்முகம் பேசியதாவது:
தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நில ஒருங்கி ணைப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தால் நீர் நிலைகள் காணாமல் போகும். 250 ஏக்கருக்கு மேல் தொழில் தொடங்க வேண்டும் என அரசுக்கு விண் ணப்பித்தால், நீர் நிலையைக் கூட கொடுக்கலாம் என சட்டத்தில் கூறப் பட்டுள்ளது. நிலம் கேட்டவரின் விண் ணப்பம் தள்ளுபடி செய்யப்படாது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும் எனக் கூறப் பட்டுள்ளது. இதற்காக ஒரு குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழு வும் அரசு அதிகாரிகளைக் கொண்ட குழு தான்.
நில ஒருங்கிணைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், கிரா மங்கள், நகரங்களில் உள்ள நீர் நிலை பொது இடங்கள் இனி இருக் காது. ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வர வாய்ப்பிருக்காது. நீர் நிலை கள் அடங்கியுள்ள பகுதியில் சிறு சிறு விவசாயிகளின் நிலங்கள் இருந் தால் அந்த நிலத்தையும் எடுத்து கொள்ளலாம். மொத்தத்தில் இந்த சட்டத்தால் நீர் நிலைக்கும், விவ சாய நிலத்துக்கும் தான் பாதிப்பு.
ஒட்டுமொத்த விவசாயிகளை யும், பொதுமக்களையும பாதிக்கக் கூடிய இந்தச் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும். அது வரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து போராடிவரும். இந்த சட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இந்த சட்டங்க ளின் பாதிப்புகள் குறித்து கிராமங் கள் தோறும் பிரச்சாரம் மேற் கொள்ளப்படும்.
திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு, விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்த மாட் டோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வி.சுப்பிரமணி யன், மாநிலத் துணைச் செயலா ளர் எஸ்.துரைராஜ், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் கோவை சுப்பிரமணியன், தஞ்சாவூர் மாவட் டத் தலைவர் பி.செந்தில்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.