districts

img

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பேரவை

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்ட பேரவை அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் ஏ.வெற்றியழகன் தலைமை வகித்தார். விதொச மாநில பொது செயலாளர் வீ.அமிர்தலிங்கம் பேரவையை வாழ்த்தியும், பல்வேறு கோரிக்கைகளை விளக்கியும் பேசினார். விதொச மாவட்ட செயலாளர் எம்.முருகையன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு, சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமணி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.மிரா, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

;