மயிலாடுதுறை, ஏப். 26-
மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் தரங்கை பேரா யர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியின் ஆண்டு விழா புதனன்று நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் தலைமை வகித்தார். பொறையார் பெத்லகேம் ஆலய ஆயர் ஜான்சன் மான்சிங், கல்லூரி காசாளர் பேராசிரியர் ஜூலியஸ் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர். வரலாற்றுத் துறை பேராசிரியர் செல்வராஜ் வர வேற்றார்.
நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என். ராஜேந்திரன் கலந்து கொண்டு நிகழாண்டில் பணி ஓய்வுப்பெறும் கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களை வாழ்த்திப் பேசினார் தொடர்ந்து பல்கலைக்கழகத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பதக்கம், நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி னார்.
விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள் மாணவ-மாணவி கள் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர். பேராசிரியர் ஸ்டீபன் தினகர் நன்றி கூறினார்.