திருச்சிராப்பள்ளி, ஏப்.21-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள நீச்சல்குளத்தில் நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சி ஏப்ரல் 25 முதல் 3 கட்டமாக நடை பெற உள்ளது.
இப்பயிற்சிகள் காலை 6.30 மணி முதல் 9.30 மணிவரை மாண வர்கள் மற்றும் ஆண்களுக்கும் மாலை 5 மணிமுதல் 6 மணிவரை மாணவியர்கள் மற்றும் பெண்களுக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.1500 செலுத்த வேண்டும்.
எனவே, நீச்சல் பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் திருச்சி அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்திற்கு நேரில் வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர், அண்ணா விளையாட்ட ரங்கம், திருச்சி என்ற முகவரியிலும் 0431-2420685 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.