கரூர், மார்ச் 26-
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணி புரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்கான ரூ.19.10 லட்சம் மதிப்பீட்டில்புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டும் பணியை ஆட்சியர் பிரபுசங்கர் ஆய்வு செய் தார்.
பின்னர் அவர் அதிகாரிகளிடம், அங்கன்வாடி மையம் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும் சுகாதாரமாக வும், தூய்மையாகவும் இருக்க வேண்டும், குழந்தை களின் மனநிலைக்கு ஏற்றார் போல் இயற்கைக் கலை ஓவியங்களுடன் இருக்க வேண்டும். விரைவில் அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறி யாளர் பிரேம்குமார், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) சைபுதீன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.