districts

குருவிக்கரம்பை நூலகத்தில் கோடை விழா

தஞ்சாவூர், மே.26 -  

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை கிளை நூலகத்தில் கோடை விழா நடைபெற்றது.

     ஓய்வு பெற்ற தமிழாசிரியர் செ.கருப்பையன் தலைமை  வகித்தார். வாசகர் வட்டம் சார்பில் பார்த்திபன் வர வேற்றார். மாசாகாடு தமிழாசிரியர் முருகையன் தான்  எழுதிய, ‘தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தென்னிந்தியர் பண்பாடு’ என்ற நூலை, நூலகத்திற்கு வழங்கி நூலகப்  புரவலராக இணைந்து கொண்டார்.  

    கோடை விடுமுறையையொட்டி மாணவர்களுக்கு நூலகம் சார்பில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அ.மெஞ்ஞானமூர்த்தி பரிசு களை வழங்கினார். குருவிக்கரம்பை நூலகர் கோ.நீல வேணி நன்றி கூறினார்.