திருச்சிராப்பள்ளி, மே 9-
கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் பயிலும் ஐந்து வயது முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோடை கால கலை பயிற்சி வகுப்புகள் நடத்தி, பயிற்சி பெற்ற வர்களுக்கு நிறைவு நாளில் பாராட்டு சான்றிதழ் வழங்கப் பட உள்ளது.
திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் உள்ள திருச்சி ராப்பள்ளி மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் ஐந்து வயது முதல் 16 வயது வரையிலான சிறார்களுக்கு குர லிசை, பரதநாட்டியம், ஓவியம் ,கராத்தே, சிலம்பம் போன்ற கலைகளில் பயிற்சிகள் வரும் மே 10-ஆம் தேதி முதல் மே 19-ஆம் தேதி வரை பத்து நாட்கள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஐந்து வயது முதல் 16 வயது வரை யிலான சிறார்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். மேலும் 9436917336, 9362230042 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.